Sunday, December 27, 2009

நேசித்துப்பார் இயற்கையை



"தனியோருவனுக்கிங் குணவில்லை எனில் "

இச் செகத்தினை அழித்திடுவோம்

என

கொதித்தெழுந்த

நீடு துயில் நீக்க பாடி வந்த என் நிலா!!

காணி நிலம் வேண்டும்

பராசக்தி

காணி நிலம் வேண்டும்

என இயற்கையையும் அது சார்ந்த வேளாண் வாழ்வையும் நேசித்தும்

இருக்கிறார்

இன்றைய இளைஞர்களின் கவனம்
உழவின் பக்கம் இல்லை.அவர்களுக்கு அறிவுரை மட்டும் கூறாது ,தானே
உழைத்துக் காட்டவே! தன் அன்னையிடம் காணி நிலம் கேட்டுள்ளார்.
அதற்குள் அன்னை தன் மகனை எடுத்துக்கொளல் என்ன நியாயமோ ?
இது என் பார்வை....!!

ஒரு நகர இளைஞனாக,நாம் ஒரு சில காத தூரம் நகரத்தை விட்டு
வெளியேறிச் செல்லும் போது காணும் வயல் வெளிகளும்,பசுமைகளும்,
சோலைகளும் மரங்களும்.. மனதை எவ்வளவு மகிழ்விக்கிறது .
இதையே நாம் உண்டாக்கி பார்த்தால் அந்த மகிழ்ச்சியை என்னவென்று
கூறுவது?!!

அந்த மகிழ்வை உணர்ந்தேன்!!! உணர்ந்ததால் உணர்ந்ததை கூறுகிறேன்

இளமையில்
சங்கம் வளர்மதுரையின் மைந்தன் யான்,
நகரத்தின் நடுவே அன்னையின் ஆலயத்திற்கு அருகில் என் இல்லம்.
நூறு சதவித நகர வாழ்க்கை. நாங்கள் விளையாடிய விளையாட்டு மைதானமோ,
அங்கையர்க்கன்னியின் ஆடி வீதி. நான் பார்த்த ஆறு ,குளம் ,கடல் , அனைத்தும்
அங்குள்ள பொற்றமரைக்குளமே, பள்ளி விடுமுறை நாட்களில் என் அம்மானின்
கிராமத்திற்கு செல்லுகையில் அங்கு நான் காணும் காட்சிகளும், மனதை தீண்டும் ஆனந்தத்திற்கும், எல்லையில்லை.
அதன் பாதிப்புகள் என் இளம் நெஞ்சினிலிருந்தே, பதிந்ததின் விளைவு ,
இன்று நான் பாரதியின் காணி நிலத்தில்!!

நெஞ்சமது நினைப்பதெல்லாம் ,எல்லோரும் ஏர் காலை தூக்கிக்கொண்டு
உழச் செல்லவேண்டுமென்ற நடை முறைக்கு ஒவ்வாத கருத்தையல்ல.
நகர வாழ்வின் மீது மோகம் கொண்டு கிராமமெனும் சொர்க்கம் தனை
இழந்து , வாழ்வதை தவிர்த்து , இயற்க்கை சார் வாழ்க்கை தரும் நன்மைகளும்,
அது தடுக்கும் தீமைகளையும் புலப்படுத்துவதாகும்.

இயற்கையை நண்பனாக ஏற்றுக்கொள்ளுங்கள் , நண்பநென்பவன் நம்மை துன்பங்களில்லிருந்து காக்ககுடியவனாவான் .ஆனால் இயற்க்கையோடினைந்த வேளாண் வாழ்வு நமக்கு துன்பங்களே வராமல் தடுக்கும் வல்லமையுடைத்து,... எவ்வாறேனும் காரணங்களை வரிசைப்படுத்துகிறேன்
முதலில் ஒவ்வொரு படித்த நல்ல, சுயதொழிலில்,உயர்ந்த பதவியில் உள்ள இளைன்ஞர்கள் தங்களுடைய
வாழ்வியலை நகரத்தில் அமைத்துக்கொள்வதை நிறுத்தி ,வேளாண் முறையில்
பண்ணை வீடுகளாக அமைத்துக்கொள்ளுதல் வேண்டும் .இன்றைய விஞ்ஞான
உலகில் தூரம் ஒரு பெரிய பொருட்டல்ல ஏனெனில் போக்குவரத்து முன்னேற்றங்களால்
உலகம் சுருங்கிக்கொண்டிருக்கிறது.
அவ்வகை பண்ணை வீடுகளில் பகுதி நேர உழைப்பாக அதிகாலையும்
மாலையும் உழைத்து உடலுக்குத் தேவையான உடற்பயிற்சியை நாம்
மேற்கொள்ள முடியும், அதைப்போலவே தொழில் போட்டிகளிலும் , வேலைப்
பளுவினாலும் ஏற்ப்படும் மன அழுத்தத்தை பிராணிகள்,பறவைகள் வளர்ப்பு
இவற்றின் மூலம் களையவும், புத்துணர்ச்சி பெறவும் முடியும் . அடுக்குமாடி
குடியிருப்புகளின் வாழ்க்கை முறையை எந்த விதத்தில் ஏற்றுக்கொள்வதென்பது
எனக்கு தெரியவில்லை.
அது நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளும் சிறை வாசம்
உடைத்தெறியுங்கள் அந்த குறுகிய மனப்பான்மையையும் ,நவினமென்று ,நாம் நினைக்கும்
அடுக்குமாடி சிறைவாசத்தையும், சூரியக்கதிர்களே! உட்புகாத சூன்ய பிரதேசங்கள் அவை.
வாருங்கள் இயற்கைசார் உலகத்திற்கு!!
இறந்த பின் அல்ல, இருக்கும் போதே சொர்க்கம் காண்போம்!!
அனைவரும்
இவ்விசயத்தில் ஆர்வலர்களாகிவிட்டால் , நம் இந்தியத்தில் இல்லை இனி
பாழ் நிலங்கள்!!!! பாழ் நிலங்கள் இல்லாத போது நாட்டில் பற்றாக்குறை என்பதேது ???
இயற்க்கை அளவிட முடியா பொக்கிஷம்!!!! அதைப்போலவே அதன் நன்மைகளும்

சொல்லிக்கொண்டே போகலாம் . உருவாக்கிப்பாருங்கள் ஒரு பண்ணைவீட்டை ,
நட்டு வைத்துப் பாருங்கள் ஒரு மரக்கன்றை, ஒரு தாயின் மகப்பேற்றை உணரலாம்.
அந்த நெஞ்சில் காதல் பிறக்கும் ,கருணை பிறக்கும் ,ஏன் இயற்க்கை அனைத்து
நற்குணங்களையும் தரவல்லது. இதை நான் சந்தித்த என் தம்பி கவிஞர்,ஈசதாசன்
செல்லத்துரை கூறியது.
அவரது கவிதையால் உங்களது மனம் இயற்கையை காதலிக்கட்டும்.
இயற்க்கை
அடர்ந்த காட்டுக்குள்
ஆங்காங்கே வான் தெரிய
பெயர் தெரியா மரங்கள்
பெயர் தெரியா மலர்கள்
பெயர் தெரியா மணங்கள்
ரசித்துக்கொண்டே நடந்தால்
கற்காதவனுக்கும்
கட்டுக்கடங்கா அருவியாய்
கொட்டும் கவிதை!!!!
இயற்கையை காணும்
பொழுதினிலேல்லாம்
இளமையைத் தாண்டி
மழலைகளாகின்றன
விழிகள்!
மழையில் நனையும்
பொழுதினிலேல்லாம்
கரைந்து கரைந்து
மழழையாகின்றது
எந்த ஒரு முதிர்ந்த
மனதாயினும்!
எத்துணை தாகமாயினும்
அடங்கி விடுகிறது
கண்கள் நிறைய
நிறைந்தோடும் நதியைக் காண்கையில்!
எத்துணை துயரமென்றாலும்
இதயம் கவலையில்
நிறைந்திருந்தாலும்
தூக்கம் சொக்கி வந்துவிடும்
தாய் மடி இரவில்!
கிடைக்காத நிம்மதியும்
தந்து விடும்
கரையில் அமர்ந்திருந்தால்
கால்களை தொடுகின்ற
கடல் அலைகள்!
காயங்கள் களவாடி
களவாடிய இடத்தில்
இதமான சுகம் தரும்
இயற்க்கை!
கனமான மனம்
கண்டால் கனத்தை பிடுங்கி
காற்றில் நிறைந்த
மணத்தை தரும்
இயற்க்கை!
கல்லுக்குள் புதைந்திருக்கிறது
கடவுள் என்றால் அது பிழை!!
கல்லுமாய் ,
கல்லுக்குள் நெருப்புமாய்!
ஏன்
கடவுளுக்குள்ளும்
புதைந்திருக்கிறது
எம் இயற்க்கை!
உலகம் மட்டுமல்ல நம்
உடலும் நிறைந்திருக்கிறது
இயற்க்கை!
உப்பின் வடிவில்
உடலுக்குள் நுழைகிறது கடல்!
வெப்ப வடிவில்
உடலுக்குள் நுழைகிறது
சூரியன்!
வேக வைத்த விதைகளாய் உடலுக்குள்
புதைகிறது தாவரங்கள்
வேறோர் வடிவும் இல்லாமல்
நேராய் உடலுக்குள் நுழையும் நீர்!
மாற்றார் வேடமின்றி நுழைகிறார்
காற்றார்!!
என
உடலுக்குள்ளும்
விழிகளுக்கு
வெளியிலும்
நிறைந்து கிடக்கிறது
இயற்க்கை!!!
கவிஞர், ஈசதாசன்
என் வீட்டுத் தோட்டத்தில்
இயற்கையை வாழ வைத்து நாமும் வாழ்வோம்!








Friday, December 11, 2009

தென் கைலாய பயணம்!!(வெள்ளிங்கிரி)


கார்த்திகை மகா தீபம்


dsc00004y.jpg



நகர இரைச்சலுக்கு நடுவே அமைதியான சொர்க்கபுரி என் கிராமம் .ஆம் !கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலைகளின் அடிவாரம் எனது ஊர் .எங்களது கிராமத்தில் ஒரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக கார்த்திகை தீபத் திருநாளன்று மலை மேல் சென்று ஊரார் தீபமேற்றுவது வழக்கம் . ஆர்ப்பாட்டமில்லாத ஆடம்பரமில்லாத மனிதனை இயற்க்கை நோக்கி செல்ல வைக்கும் ஒரு அற்புத திருவிழா அது .கணினிக்கு நாம் ரிப்ராஸ் கொடுத்து இளைப்பாற செய்வது போல் ,என் கிராமத்தார் வருடத்திற்கு ஒரு முறை தங்களை இயற்கையோடு ஒன்டரினைததுக்கொள்ளும் ஓர் அற்ப்புத திருவிழா. ஆம்!, அன்று காலை ஊர் பெரியவர்கள் மேலே மலைக்கு செல்லும் இளைஞர்ளையும் அவர்களது உடமைகளையும் வைத்து ஊர் மாரியம்மன் கோவிலில் பூஜை செய்து வழி அனுப்பி வைப்பார்கள் ,மேலே பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் ,ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொன்றாக ஒப்படைத்து அனுப்பப்படும் . இதில் எடை குறைவான பொருட்களை எடுக்க எங்களுக்குள் போட்டி நடப்பது வேறு விஷயம் !


இனி மலைபயணம்........




பிறவிகளை கடந்த பயணம்



photo0043hk.jpg




இந்த வெள்ளிங்கிரி ஆண்டவர் தன்னை வணங்கியவர்களுக்கு முக்தி மட்டுமே தருபவராம்! அதனால் தானோ என்னவோ? நமது ஏழு பிறப்பின் துன்பத்தையும் இப்பிறவியிலேயே வாங்குவதற்காக எழாவது மலையில் சுயம்புவாக தோன்றி இருக்கிறார் . சோ! நாம் கட்டாயம் ஏறி ஆக வேண்டும் முதலில் அடிவாரத்தில் இருக்கும் அவரை வணங்கி மலை ஏற தொடங்குவோம்.இதில் முதல் மழையும் ,வழுக்குபாறை என்ற இடங்களும் நம்மை "வந்துபார்" என்று சொல்லுவது நம் காதுக்கு கேட்கிறதோ இல்லையோ நம் காலுக்கு நன்றாக கேட்கும் . நமது கால்கள் "என்னை விட்டுடா" என்பது நமக்கு நன்றாக கேட்கும்! இதை எப்படியாவது கடந்து விட்டால் !!!!
நமது கண்களையும் கருத்தையும் ஏன்! நம் ஐம்புலன்களையும் ஆனந்தப்பரவசப்படுத்துவால் இயற்க்கை அன்னை அற்ப்புதமான சமவெளிகளும், மலை முகடுகளும்,இயற்க்கை எழில் சூழ் வனங்களும், மேகத்தின் உரசல்களும், தாகத்திற்கு கிடைக்கும் இயற்கையின் பிஷ்லரிகளும் ஏராளம்! இருந்தாலும் மனித வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருப்பது போல் இடையிடையே நமது பாதையிலும் ஏற்ற தாழ்வுகள்???????

வந்துதான் தீரும்! என்ன செய்வது? கடினப்பட்டு ஆறு மலைகளையும் கடந்து நமச்சிவாயனின் பொற் பாதங்களான எழாவது மலையின் அடிவாரத்தை அடைந்தால் நாம் இதுவரை நடந்து வந்த களைப்பையும் ,மனஇறுக்கத்தையும் ,போக்க புண்ணிய தீர்த்தமாம் ஆண்டி சுனை நம்மை அன்புடன் அரவணைக்கும்.

dsc00007io.jpg

அதில் குளித்து எழுந்ததும் ஏதோ புதிதாய் பிறந்த மான்குட்டியின் புத்துணர்வை போல நமது உடலும் மனமும் மாறும். அந்த உணர்வுடனே பயணத்தை தொடர்ந்தால் பிரம்மாண்டத்தின் பொருளை நேரில் தரிசிக்கலாம், அனால் காணத்தான் கண் போதாது. தெய்வீகம்!!!!!!"தெய்வீகம்" என்று விவரித்து என் அந்த மகா சிலிர்ப்பை குறைத்து கொள்ள என்னால் இயலவில்லை!மேலும் சொல்ல முயல்கிறேன்..........மலை உச்சி , அதற்கு மேல் செல்ல இடமில்லை........ஆனாலும் இருக்கிறது?அதுநமசிவாயனின் முடி

(சுயம்பு லிங்கேஸ்வரரின் குகை கோவில்)

vellingiri11.jpg

ஈஸ்வரனின் முடியை தொட நினைத்த பிரம்மனின் கதை தான் நாம் அறிவோமே!!அதனால் அது வேண்டாம் நமக்கு.நான் நிற்பதோ நாதனின் தாள், அது இருப்பதோ சிகரத்தின் மேல்!!இறைவனின் அடி சேர்வதோ ஆன்மா மட்டுமே. இங்கோ ஆன்மாவோடு நானும் இருக்கிறேன்!!!இந்த அற்புதம் தான் அந்த தெய்வீகம்!!!!!!!!!!!!!!!



மகா தீப வழிபாடு



dsc00025yu.jpg

மேற் சொன்ன அற்புத உணர்வோடே தென் கைலை நாதனை போற்றி வணங்கி செங்கதிரோன் சென்ற பின் செங்கதிர் திரு நெய் தீபம் ஏற்றினோம். நீங்களும் பாருங்களேன்........

நமசிவாய வாழ்க

நாதன் தாள் வாழ்க..





Tuesday, November 17, 2009

அறிமுகம்-2

இன்னும் பழகிக் கொண்டுதான் இருக்கிறேன் .
எழுத தடை ஒன்றும் இல்லை ...சிந்தனை பெருக்கேடுத்து ஓடுகிறது.....ஆறாய்
இருப்பினும் நன்றாக பழகியதும் வருகிறேன்.
அழப்பிடாது...என்ன!!!!

Sunday, November 01, 2009

அறிமுகம்

பழகிய பின் இங்கு வருகிறேன்