Sunday, August 07, 2011

கவின்மிகு குற்றாலம்...!!

வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும்,
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்'


இந்த பாடலில் வரும் குற்றாலத்தின் இயற்கை அழகை காண சிறுவயதில் இருந்து ஆவல் கொண்டதுண்டு., ஆனால் அந்த வாய்ப்பு கல்லூரி நாட்களில் தான் கிடைத்தது. அந்த நாளில்..., முதன் முதலில் குற்றாலத்தை பார்த்து அதன் அழகில் மயங்கிய நாங்கள் ஒவ்வொரு வருடமும் நண்பர்களனைவரும் தவறாது குற்றாலம் வருவதென முடிவெடுத்தோம். ஆண்டுகள் இருபதிர்க்கு மேலாகிவிட்டது,வருடாவருடம் ஒருசில நண்பர்கள் விடுபட்டாலும் குறைந்தது பத்து பேராவது தவறாது இன்று வரை சென்று வருகிறோம் என்பதை நினைக்கும் போது மனதில் மட்டற்ற இளமை ததும்பும் மகிழ்ச்சி நிலவுகிறது.