அதே மழை இன்றும்....
அன்றவள் என் இனிய தோழமை
அழைத்தனள் அவளின் குடைக்குள்
சென்றனன் நனையாது நானும்
தோழமை என நான் சொன்னதன்
உட்கரு தோழி என அவளை பெண்பாலில்
கூறத்தெரியா......நினைக்க விழையா....
பால் மனம்
பாவை இன்றவள்
பார்க்கிறாள் நனைவதை
பாராது சென்றனள் பார்வை ஒன்றை
விதையாய் நட்டுவிட்டு
பாவி மனம் குறுகுறுக்க
பார்த்தவிழி நீர் இரைக்க
என் மனதை என் மனமே
கேள்வி ஒன்னு கேட்குதடா....?!
குடைதான் சிறிதோ.....? இல்லை
நீ குறைதான் உளனோ....?
மனம் தான் இலையோ.....இல்லை
மறந்தாள் உனையோ.....?
வயதொரு காரணமோ....இல்லை
வாலிபமொரு களவோ....?
எதுவென்ற போதினிலும்
இழந்ததடா ஓர் நட்பு....!!!