Tuesday, October 27, 2015

கடவுளும் நானும்




நிகழ்வு நடப்பது
மதுவின் மயக்கத்தில்...,
இங்கு நீ கடவுளுமில்லை
நான் மனிதனுமில்லை
எனைப் பாதித்ததோர்
படர்க்கைச் சொல்
"அவன் என்ன பாவம் செய்தானோ...?
பிள்ளையாய் பிறந்திருக்கிறது"
இதுவே அந்த படர்க்கை
புரியாமல் நானும்
பெற்றவளிடம் கேட்டேன்
"நானென்ன பாவம் செய்தேன்
எனக்கோர் பிள்ளை இப்படி"
டேய் அதெல்லாம்
பூர்வ ஜென்ம பாலபலன்
கவலை விடு எல்லாம்
கடவுள் பாத்துக்குவான்...???
பெற்றவள் பற்றுடன் இப்படிச் சொன்னாள்
அதனால் தான் உன்னிடம்
வந்தது பயபக்தியால் அல்ல....
தெரியாததோர் பிறவியற் செய்த
பலனுக்காம்....  புரியாததோர்.....???
பலனாய் நிகழில்....?!
நிஜம் என்னவென்பதை
அறிய அறிவு ஆசைப்படுகிறது அதனால்...
உனக்கும் எனக்குமொர்
ஒப்பந்தம்
உலகை இயக்கும் காலமும்
காலத்தை படைத்த நீயும்
ஓர் உடன்படிக்கைக்கு உள் வரவேண்டும்
என்னவெனில்
எந்த மானு டம் தண்டிக்கப் படுகிறதோ....?
அதன் ஊழ்வினையை அது அறிதல் வேண்டும்
முடியுமெனில் இனி உன்
காலச்சக்கரத்தை நீ நகர்த்து.

No comments:

Post a Comment