Sunday, March 30, 2014

மதுரையல்ல..., மக்காள் இது மாமதுரை...!! (3)






இருக்கு...,ஆனா... இல்ல...??

அங்கையற்கண்ணி ஆலவாயண்ணலின் ஆலயத்தினுள்...,

அரங்கனுக்கோர் கோயிலா...?

இருந்ததா...?

இருந்ததை அறிய...,

தசாவதாரத்தில் உலகநாயகன் சொல்வாரே...,
அதைப் போல ஏழாம் நூற்றாண்டை நோக்கி சற்று பின்னோக்கி பயணிப்போம்
வாருங்கள்.,

ஏழாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில்
சமண-சைவ சமயப் பூசல்கள் அதிக அளவில் நேர்ந்தன...,
மனிதனுக்குள் மதம் தீயென பற்றிக்கொண்ட காலமது ஆம்...,
மதங்கள் ஒன்றொடொன்று மதம்பிடித்து
மோதிக் கொண்டன
வைகையின் வெள்ளநீர் சிவந்திருந்த காலம்...,ஆம் சமணர்கள் பல்லாயிரம் பேர் கழுவேற்றப் பட்டனர்.(கழுவேற்றம்...மனிதக் கண்கள் காண அச்சப்படும் மிகக் கொடிய தண்டனை)
சைவத்தின் கை ஓங்கியது அதற்கு சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான திருநாவுக்கரசர் சூளைநோய்க்கு ஆட்கொண்டு ஈசன் சொக்கனால் ஆட்கொண்டு விடுவிக்கப் பட்டமையால் சமணத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மீண்டு வந்தார் என்கிற சரித்திர நிகழ்வும் ஓர் காரணமாயிற்று.
தீர்ந்தது மனிதனை பீடித்த மதம் என
வரலாறு நினைத்துக் கொண்டிருந்த போதே...,
மதத்தை கடந்த உட்பிரிவில் சமயங்கள் தங்களுக்கு செஞ்சாயங்களை வாரி இறைத்துக் கொண்டன...
உண்மை
இதுதான்...,
சிவனும் விஷ்ணும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டதாயும் எனக்கு தெரியவில்லை
அவர்கள் இருவரும் தங்களை பின்பற்றுபவர்களையும் அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளச் சொன்னதாயும்..,
எந்த அகநானூறும்,புறநானூறும், சங்கப் பாடலும்
சொல்லவே இல்லை

இருந்தும்...,

சைவமும் வைணவமும் தங்களுக்குள் பங்காளிச் சண்டையைப் போல் மோதிக்கொண்டன ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்...,
இச்சைவ வைணவ போரட்டங்களுப்பின் சிவாலயங்களில் பெருமாள் சந்நதிகளை அமைக்கும் இருசாரர்களையும் இணைக்கும் இயக்கங்கள் தோன்றின
அவ்வியக்கங்களின் பெருமுயற்சியால்
தில்லைக் கூத்தப் பெருமான்(சிதம்பரம்) திருக்கோயில், மதுரை மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோயில் போன்ற பெருங்கோயில்களில் இருசமய ஒருமைப்பாடு ஏற்பட்டு பெருமாள் சந்நதிகள் தோன்றின.
இவ்வாறாய் ஆலவாயண்ணல் அங்கையற்கண்ணியின் ஆலயத்தினுள் தோன்றியவர் தான்
"அருள்மிகு கரியமாணிக்கப் பெருமாள்" இச்சந்நதி ஆலயத்தினுள் வடக்கு (மொட்டைக் கோபுரம்)கோபுரத்தின் நேர் எதிர் உள்ள ஐந்துநிலை சிறிய கோபுர வாயினுள் சென்றால் சுவாமி சந்நதியின் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்திருந்தது

இது பிற்பாடு ஏற்பட்ட மொகலாயத் தளபதி மாலிக்காபூர் படையெடுப்பின் போதும் அதன் பின் மதுரையில் ஏற்பட்ட சுல்தான்களின் ஆட்சியின் போதும் சிதைவுற்று அழிந்தது.
இப்படையெடுப்புக் காலங்களில் மீனாட்சியம்மன் திருவுருவச் சிலையும் சொக்கநாதரும் நாஞ்சில் நாட்டில் மறைத்து வைத்திருந்து பிற்பாடு வந்த பாண்டிய,நாயக்க மன்னர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு
ஆனால் பிற்காலத்தில் இக்கரிய மாணிக்கபெருமாள் சந்நதி சற்று சீரமைக்கபட்டாலும் அதில் கரிய மாணிக்கபெருமாள் இல்லாதது மர்மமே...!!
தற்பொழுது இதே சந்நதி மண்டபத்தில் தான் அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் இருந்து அருள்பாலிக்கிறார்
திருக்கல்யாண கோலத்தில் நிற்கும் கல்யாண சுந்தரேஸ்வரருக்கு உமையவள் மீனாட்சியம்மையை தாரை வார்க்கிறாரே...,
சாட்சாத்...,(இந்த வார்த்தையின் பொருள் உண்மையில் எனக்குத் தெரியாது எந்த மொழி தெரியாது ஆனால் ஒரு நபரையோ,ஒருபொருளையோ,வேறு சில விசயங்களையோ என் இளம்பருவத்தில் எனது தாத்தா பேசும் போது அடிக்கடி பயன்படுத்துவார் இதைப்போல பல சொற்கள் நான் பொருள் புரிந்தும் பொருள் தெரியாமல் தேடிக் கொண்டிருப்பவை) அவரே கரிய மாணிக்கப் பெருமாள்.
இக்கரிய மாணிக்க பெருமாள் திருக்கோயிலினுள் இருந்தார் என்பதன் சாட்சி இல்லாமல் இல்லை இருக்கிறது ஆம்...,
மன்னர் திருமலைநாயக்கர் தனது ஆட்சிகாலத்தில் மீனாட்சி அம்மன் கோயிலில் அநேக திருப்பணிகளை மேற்கொண்டார் அதில் ஓன்றுதான் சிதிலமடைந்த கரிய மாணிக்க பெருமாள் கோயிலின் தூண்களையும்,கற்காரங்களையும் வைத்து பொற்றாமரைக்குளத்தின் மேற்கு கரையில் உள்ள கலை நயமிக்க சங்கலி மண்டபத்தைக் கட்டினார். அதன் தூண்களில் உள்ள பஞ்சபாண்டவர்,அனுமன் சிலைகள் இருப்பதே....கரிய மாணிக்கப் பெருமாள் சந்நதி இருந்து பின் சிதைந்ததிற்கான சான்றுகள்
முடிவாய் மீனாட்சியம்மன் ஆலயத்தினுள் வைணவனும் கரிய மாணிக்க பெருமாளாய் இருந்தார் இன்று இல்லை.
மொத்தத்தில் ஆன்மீக பயன்பாட்டில் இருந்த சைவமும் வைணவமும் சில காலம் அரசியல் சதுரங்கத்தில் சிக்கித் தள்ளாடிய நெடி
இருக்கத்தான் செய்கிறது

No comments:

Post a Comment